கோவை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்கின்ற உத்தரவைப் பிறப்பித்ததற்காக கோவை பெரியார் திராவிட கழக மகளிர் அணியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்கின்ற உத்தரவைப் பிறப்பித்ததற்காக கோவை பெரியார் திராவிட கழக மகளிர் அணியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த மகளிர் அணியினர் இன்று கோவை பேருந்தில் இலவசமாக பயணம் செய்து மீண்டும் காந்திபுரம் பேருந்து நிலையம் அடைந்தனர். பிறகு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மகளிர் அணியினர் நம்மிடம் கூறியதாவது:- ‘‘புதிதாகப் பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றவுடன் மகளிரின் நலனை கருத்தில் கொண்டு உள்ளூர் பேருந்துகளில் இலவசமாகப் பெண்கள் பயணம் செய்யலாம் என்கின்ற உத்தரவை பிறப்பித்திருந்தார்.
அதனடிப்படையில் நாங்கள் இன்று இலவசமாக நகரப் பேருந்துகளில் பயணம் செய்தோம். இதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தில் உள்ள பெண்கள் தங்களுடைய குடும்பப் பொறுப்புகளை சுமந்து 8 ஆயிரம், 10 ஆயிரம், மதிப்பிலான சம்பளத்தில் வேலைகளுக்கு செல்கின்றனர். இந்தநிலையில், அவர்கள் தினம்தோறும் சம்பளம் போக பேருந்து கட்டணத்தை தனியாக எடுத்து வைக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்கின்ற உத்தரவிட்டது, கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள குடும்பப் பெண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் விதமாக உள்ளது. அதனால், நாங்கள் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மகளிர் அணி சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.'' என்று கூறினர்.
தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த மகளிர் அணியினர் இன்று கோவை பேருந்தில் இலவசமாக பயணம் செய்து மீண்டும் காந்திபுரம் பேருந்து நிலையம் அடைந்தனர். பிறகு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மகளிர் அணியினர் நம்மிடம் கூறியதாவது:- ‘‘புதிதாகப் பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றவுடன் மகளிரின் நலனை கருத்தில் கொண்டு உள்ளூர் பேருந்துகளில் இலவசமாகப் பெண்கள் பயணம் செய்யலாம் என்கின்ற உத்தரவை பிறப்பித்திருந்தார்.
அதனடிப்படையில் நாங்கள் இன்று இலவசமாக நகரப் பேருந்துகளில் பயணம் செய்தோம். இதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தில் உள்ள பெண்கள் தங்களுடைய குடும்பப் பொறுப்புகளை சுமந்து 8 ஆயிரம், 10 ஆயிரம், மதிப்பிலான சம்பளத்தில் வேலைகளுக்கு செல்கின்றனர். இந்தநிலையில், அவர்கள் தினம்தோறும் சம்பளம் போக பேருந்து கட்டணத்தை தனியாக எடுத்து வைக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்கின்ற உத்தரவிட்டது, கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள குடும்பப் பெண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் விதமாக உள்ளது. அதனால், நாங்கள் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மகளிர் அணி சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.'' என்று கூறினர்.