கோவை: குறுந்தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண தொகை வழங்க தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: குறுந்தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண தொகை வழங்க தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா நோய் தொற்று பரவலின் இரண்டாவது அலை அனைத்து தரப்பிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின்(TACT) மாவட்டத் தலைவர், ஜேம்ஸ் கூறியதாவது,
"கொரோனா நோய் தொற்று பரவல் முதல் அலை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் குறுந்தொழில் துறையினர் மீண்டு வராத சூழலில் இரண்டாவது அலை நோய் தொற்று மிக வேகமாக பரவி வருவது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் செயல்படும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந் தொழில் நிறுவனங்களில், 80 சதவீதத்துக்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இருப்பினும் குறுந்தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழில் நிறுவனங்கள் ஈட்டும் ஆண்டு வருவாய் கணக்கிட்டு அதில் 10 சதவீதத்தை நிவாரணமாக வழங்க வேண்டும். தவிர மத்திய அரசுடன் பேசி குறுந்தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்கள் வாங்கிய வங்கி கடனுக்கான வட்டியை ஓராண்டுக்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனடியாக மாவட்டம்தோறும் கலெக்டர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடத்தி குறுந் தொழில் மற்றும் குடிசை தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த "எம்எஸ்எம்இ" தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை குறித்து தொழில் துறையினரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
'கொரோனா' நோய் தொற்று கொடியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதை விட 'பசியும்', 'நிதி நெருக்கடியும்' மிகக் கொடியது. அரசு உதவி இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் காணாமல் போகும் நிலை உருவாகும்." இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா நோய் தொற்று பரவலின் இரண்டாவது அலை அனைத்து தரப்பிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின்(TACT) மாவட்டத் தலைவர், ஜேம்ஸ் கூறியதாவது,
"கொரோனா நோய் தொற்று பரவல் முதல் அலை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் குறுந்தொழில் துறையினர் மீண்டு வராத சூழலில் இரண்டாவது அலை நோய் தொற்று மிக வேகமாக பரவி வருவது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் செயல்படும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந் தொழில் நிறுவனங்களில், 80 சதவீதத்துக்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இருப்பினும் குறுந்தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழில் நிறுவனங்கள் ஈட்டும் ஆண்டு வருவாய் கணக்கிட்டு அதில் 10 சதவீதத்தை நிவாரணமாக வழங்க வேண்டும். தவிர மத்திய அரசுடன் பேசி குறுந்தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்கள் வாங்கிய வங்கி கடனுக்கான வட்டியை ஓராண்டுக்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனடியாக மாவட்டம்தோறும் கலெக்டர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடத்தி குறுந் தொழில் மற்றும் குடிசை தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த "எம்எஸ்எம்இ" தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை குறித்து தொழில் துறையினரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
'கொரோனா' நோய் தொற்று கொடியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதை விட 'பசியும்', 'நிதி நெருக்கடியும்' மிகக் கொடியது. அரசு உதவி இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் காணாமல் போகும் நிலை உருவாகும்." இவ்வாறு அவர் கூறினார்.