ஜவாஹிருல்லாவுக்கு தற்காலிக சபாநாயகர் வாய்ப்பு!

கோவை: மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு தற்காலிக சபாநாயகராக பதவி வகிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


கோவை: மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு தற்காலிக சபாநாயகராக பதவி வகிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைப்பது வழக்கம். இதற்கு ஆளும் கட்சி சார்பில் மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுத்து அறிவிப்பார்கள். அந்த வகையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவை தற்காலிக சபாநாயகராக பதவி வகிக்கும் வாய்ப்பை வழங்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி வாய்ப்பு அளிக்கப்படும் பட்சத்தில் ஜவாஹிருல்லாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை பதவி பிரமாணம் செய்து வைப்பார். இதையடுத்து புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்கு சட்டசபை கூடும். அப்போது சட்டசபையில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது 2011 -ம் ஆண்டு இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு. தமிழரசன் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தபோது செம்மலை தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டார். இந்த முறை மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹருல்லா வுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...