பரம்பிக்குளம் வாய்க்காலில் தண்ணீர் திருட அமைக்கப்பட்ட குழாய்கள் அகற்றம்- விவசாயி கைது


திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து விவசாயத்திற்காக 2-ம் மண்டல பாசனத்திற்கு கடந்த 4ம் தேதியன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நெகமம், சுல்தான்பேட்டை வழியாக காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிக்கு செல்கிறது. இதன் மூலம் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

 

இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள மூலனூர் பகுதியில் செல்லும் பரப்பிக்குளம் பிரதான வாய்க்கால் பகுதிகளின் ஓரங்களில் பைப் அமைத்து சிலர் தண்ணீர் திருடுவதாக பிஏபி கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுசெய்த போது அங்கு வாய்க்கால் ஓரத்தில் கற்களுக்கு இடையே குழாய் அமைத்து திருட்டுத்தனமாக தண்ணீர் திருடப்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, உடனடியாக ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு குழாய்களை அகற்ற முயன்றபோது கால்வாய் அருகே முறைகேடாக குழாய் பதித்து  தண்ணீர் திருடிய விவசாயி பழனிச்சாமி அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரி சதீசை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். ஆனாலும், பொதுப்பணித் துறையினர் வாய்க்கால்  பகுதியில் முறைகேடாக பதித்த குழாய்களை முழுவதும் அகற்றினார்கள். 

இதைத்தொடர்ந்து, அதிகாரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயி பழனிச்சாமி மீது பொதுப்பணித் துறையினர் நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, விவசாயி பழனிச்சாமியை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...