உரிய விலை கிடைக்காததால் கிணத்துக்கடவு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைவு; நஷ்டத்தில் விவசாயிகள்..!

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவாக நாட்டுத் தக்காளியை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவாக நாட்டுத் தக்காளியை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்தாண்டு நல்ல மழை பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்ததோடு கிணறுகளிலும் தண்ணீர் வற்றாமல் உள்ளது.

இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயிகள் நாட்டு தக்காளி அதிகளவில் சாகுபடி செய்ததால் விளைச்சல் அதிகமாக காணப்பட்டது.

அண்மைக்காலமாக, கிணத்துக்கடவு காய்கறி மார்க்கெட்டுக்கு அதிக அளவில் தக்காளி வரத்து இருந்து வந்தது. 15 கிலோ எடை கொண்ட நாட்டுத் தக்காளி 70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை மட்டுமே ஏலம் போனது.



இதனால், ஆயிரக்கணக்கில் செலவு செய்து சாகுபடி செய்யப்பட்ட தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், தக்காளியை பறிக்காமல் செடியிலேயே, விவசாயிகள் விட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கிணத்துக்கடவு மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக தக்காளியின் வரத்து குறைவாகவே காணப்படுகிறது.



இன்றைய நிலவரப்படி, கிணத்துக்கடவு மார்க்கெட்டில் ஒரு கிலோ நாட்டுதக்காளி 7 ரூபாய்க்கு ஏலம் போனதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...