மறைந்த நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவை: மறைந்த நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஏவுகணை நாயகரின் தூதுவராக ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டு சுமார் 30 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு முன்னோடியாக இருந்தவரும், திரைப்பட நகைச்சுவை நடிகரும் சின்ன கலைவானருமான விவேக் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவரின் கனவினை செயல்படுத்திட விழுதாய் வேரூன்றிட காட்டம்பட்டி (கடத்தூர்) என்ற குன்னாத்தூர் குளத்தில் அவரின் நினைவாக ஆலமரக் கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்வில் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

ஏவுகணை நாயகரின் தூதுவராக ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டு சுமார் 30 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு முன்னோடியாக இருந்தவரும், திரைப்பட நகைச்சுவை நடிகரும் சின்ன கலைவானருமான விவேக் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவரின் கனவினை செயல்படுத்திட விழுதாய் வேரூன்றிட காட்டம்பட்டி (கடத்தூர்) என்ற குன்னாத்தூர் குளத்தில் அவரின் நினைவாக ஆலமரக் கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்வில் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.