கோவை - இலங்கை இடையே விமான சேவை மீண்டும் துவக்கம்..! புதிய 'ஏர் பபுள்' ஒப்பந்தம் நேற்று முதல் அமல்!

கோவை: கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவை - இலங்கை இடையிலான விமான சேவை மீண்டும் துவக்கப்பட உள்ளது.



கோவை: கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவை - இலங்கை இடையிலான விமான சேவை மீண்டும் துவக்கப்பட உள்ளது.

கோவை - இலங்கை இடையே 'ஏர் பபுள்' ஒப்பந்தம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் துவங்கும் வரையில், இந்த ஒப்பந்தம் தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா - இலங்கை இடையே விமான நிறுவனங்கள் சர்வீஸ் துவக்கி கொள்ளலாம். தொழில், வணிகம், மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இவ்விரு நாட்டினரும் பயணம் மேற்கொள்ள விமான சர்வீஸ் பயன்படுத்திக்கொள்ளலாம். தவிர நோய்த்தொற்று பரவல் காரணமாக அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை ஏர்லைன்ஸ் நிறுவனங்களும், பயணிகளும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு (Colombo), ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவை வழங்கி வந்தது. நோய்த் தொற்று பரவல் காரணமாக சேவை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், 'ஏர் பபுள்' ஒப்பந்தம் அமலுக்கு வந்ததால், மீண்டும் கோவை - இலங்கை இடையே விமான சர்வீஸ் துவக்கப்பட உள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...