கோவையில் மொபைல் யூனிட் மூலமாக வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட முடிவு!

கோவையில் மொபைல் யூனிட் மூலமாக வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நான்கு மண்டலங்களும் சேர்த்து ஒரே நாளில் 2716 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது


கோவை: கோவையில் மொபைல் யூனிட் மூலமாக வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நான்கு மண்டலங்களும் சேர்த்து ஒரே நாளில் 2716 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை மட்டுமின்றி, மாநகராட்சியால் நடத்தப்படும், 32 மகப்பேறு மருத்துவமனைகளிலும், கொரோனா தடுப்பூசி இலவசமாக போட்டுக் கொள்ளலாம்.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி பகுதியில், நாளை (11ம் தேதி), மொபைல் யூனிட்டுகள் துவக்கப்படுகின்றன. வீதி வீதியாகச் சென்று தடுப்பூசி போடப்படுகிறது.

எனவே, மக்கள் மாநகராட்சி மருந்தகங்களுக்கு தாமாக முன்வந்து, தடுப்பூசி போட்டு வருகின்றனர். வடக்கு மண்டலத்தில் 695, மேற்கு - 683, மத்திய மண்டலம் - 560, தெற்கு - 430, கிழக்கு மண்டலத்தில் 348 என, நேற்று ஒரே நாளில், 2,716 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இதனிடையே, கருப்ப கவுண்டர் வீதியில் மாநகராட்சி பகுதியில், நேற்று ஒரே நாளில், 248 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 16 பேர் இருப்பிடம் இன்னும் கண்டறியப்படவில்லை. 3 இடங்களில் மீண்டும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.

கருப்ப கவுண்டர் வீதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த, 16 வீடுகளில் வசிப்போருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள நான்கு கட்டிடங்கள் அடைக்கப்பட்டன.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...