கோவை: கோவையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விதியை மீறியதாக மொத்தம் 157 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
கோவை: கோவையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விதியை மீறியதாக மொத்தம் 157 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக 35 வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவையில் கடந்த பிப்ரவரி 26 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இது குறித்து மாவட்ட காவல்துறை கூறுகையில், தேர்தல் அமைதியாக முடிந்துள்ளது. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சிறுசிறு சலசலப்புகள் பிரச்சனைகள் உருவாகின. அதை போலீசார் உடனடியாக சென்று பேச்சுவார்த்தை மூலமாக அமைதிப்படுத்தினர்.
கோவை மாவட்டத்தில் இதுவரை ஓட்டுக்கு பணம், பரிசு கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 35 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தவிர தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக 180 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தையும் விசாரணை நடத்தி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவையில் கடந்த பிப்ரவரி 26 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இது குறித்து மாவட்ட காவல்துறை கூறுகையில், தேர்தல் அமைதியாக முடிந்துள்ளது. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சிறுசிறு சலசலப்புகள் பிரச்சனைகள் உருவாகின. அதை போலீசார் உடனடியாக சென்று பேச்சுவார்த்தை மூலமாக அமைதிப்படுத்தினர்.
கோவை மாவட்டத்தில் இதுவரை ஓட்டுக்கு பணம், பரிசு கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 35 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தவிர தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக 180 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தையும் விசாரணை நடத்தி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.