கோவையில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 4,400 போலீசார் குவிப்பு!

கோவை: கோவை புறநகர் பகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 4,400 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


கோவை: கோவை புறநகர் பகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 4,400 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டுச்சாவடிகள் பிரச்சனை இல்லாத பதட்டமான மிகவும் பதட்டமான ஓட்டுச்சாவடிகள் என பிரிக்கப்பட்டு அதற்கேற்றாற்போல வாக்குச்சாவடிகளை போலீசார் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

மேலும், பிரச்சனையில்லாத ஓட்டுச்சாவடிகளில் 4 முதல் 6 போலீசாரும், பதட்டமான மற்றும் மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் அதிகளவு போலீசாரும், மத்திய அதிரடிப்படை வீரர்களும் பணியமர்த்தப்படுவர். மாவட்டத்துக்கு இதுவரை 9 கம்பெனி துணை ராணுவம் வந்துள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை மூவாயிரத்திற்கும் அதிகமான ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில் 4,400 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக தற்போது கோவை மாவட்ட போலீசார், துணை ராணுவத்தினர், என்.எஸ்.எஸ் மாணவர்கள், முன்னால் போலீசார், ராணுவத்தினர், உள்ளிட்டோரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறியதாவது:-

கோவை மாவட்டத்திற்கு ஏற்கனவே 9 கம்பெனி துணை ராணுவம் பணி அமர்த்தப்பட்டு உள்ளது. இது தவிர என்.எஸ்.எஸ் மாணவர்கள் மட்டும் 1,500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர், போலீசார், வனத்துறையினர் என 500 நீலகிரி கோவை மாவட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து ஊர்க்காவல் படையினர் 650 பேர் வரவுள்ளனர். மாவட்ட போலீசார் 1,500 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 400 பேர் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

இதுதவிர தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களிலிருந்து ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் போலீசார் என 500 பேர் வருகின்றன. தேவை போக மீதமுள்ள 400 பேர் தேவைப்படும் போது பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...