தொண்டாமுத்தூரில் போலி வாக்காளர்கள்: திமுகவினர் புகார்

கோவை: தொண்டாமுத்தூரில் போலி வாக்காளர்கள் பெயரில் கள்ள ஓட்டு போட முயற்சிகள் நடப்பதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சேனாதிபதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.



கோவை: தொண்டாமுத்தூரில் போலி வாக்காளர்கள் பெயரில் கள்ள ஓட்டு போட முயற்சிகள் நடப்பதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சேனாதிபதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி அளித்துள்ள புகாரில் கூறப்பட்டிருப்பதாவது;

"தொண்டாமுத்தூர் தொகுதியில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்திலும், ஈசானா விஹார் பகுதிகளிலும் வசித்து வரும் மலைவாழ் மக்கள் வாக்களிக்கும் வகையில் முட்டத்துவயல் பகுதியில் உள்ள அரசு மலைவாழ் பள்ளியில் வாக்கு சாவடி எண் 51 அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்கு சாவடிகுட்பட்ட பாரதியார் வீதி, ஈசானா விஹார் வீதிகளில் வெளி மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வார்டு எண் 5ல் வசிக்கும் அவர்கள் எந்தவித ரத்த சொந்தம் கொண்டவர்களோ அல்லது வாக்குரிமை பெறும் அளவிற்கு நிரந்தரமாக இங்கு வசிப்பவர்களோ அல்ல.

ஆனால், இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் அவர்களுக்கு போலியான முகவரி கொடுத்து அதன் வாயிலாக அவர்களுக்கு வாக்குரிமை வழங்கி தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட ஒரே வளாகத்திற்குள் 700 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். 50க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் வசிப்பிடம் ஒரே முகவரியில் இருக்கிறது. எவ்வாறு அந்த குறிப்பிட்ட முகவரிகளில் 50 முதல் 100க்கும் மேற்பட்டோர் வசிக்க முடியும்?

எதன் அடிப்படையில் இவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.தொகுதிக்கும் இவர்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாத போது என்ன நோக்கத்திற்காக யார் தலையீட்டின் அடிப்படையில் இந்த தேர்தல் முறைகேடு நடந்துள்ளது என்பதை தேர்தல் ஆணையமும், மாவட்ட ஆட்சியர் அவர்களும் உரிய விசாரணை நடத்தி உண்மையை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்.

தேர்தலுக்கு வெறும் 6 நாட்களே உள்ள நிலையில் துரித விசாரணை நடத்தி வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேட்டை நீக்கி கள்ள ஓட்டு போடும் முயற்சியை தடுக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியை கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்படுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...