கோவை: சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மற்றொரு லாரி மோதியதில் இரு லாரிகளும் சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புகுந்ததில் 6 பேர் காயமுற்றனர்.
கோவை: சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மற்றொரு லாரி மோதியதில் இரு லாரிகளும் சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புகுந்ததில் 6 பேர் காயமுற்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் இன்று காலை ஊட்டி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்றின் டயர் வெடித்தது. இதனால் அந்த லாரி சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் காலை 4 மணி அளவில் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி, நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் 2 லாரிகளும் சாலையின் ஓரத்திலிருந்த சாந்தாமணி என்பவரது வீட்டின் மேற்கூரை மீது பாய்ந்தன. அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சாந்தாமணி அவரது பேரன் ரஞ்சித் குமார் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.
ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த லாரியில் பயணம் செய்த கூடலூர் சேரம்பாடியைச் சேர்ந்த செல்வராஜ் (52) அவரது மனைவி விஜயலட்சுமி (45) இவர்களது மகன் கார்த்திக் (28) மகள் கவிதா (19) உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் இன்று காலை ஊட்டி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்றின் டயர் வெடித்தது. இதனால் அந்த லாரி சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் காலை 4 மணி அளவில் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி, நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் 2 லாரிகளும் சாலையின் ஓரத்திலிருந்த சாந்தாமணி என்பவரது வீட்டின் மேற்கூரை மீது பாய்ந்தன. அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சாந்தாமணி அவரது பேரன் ரஞ்சித் குமார் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.
ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த லாரியில் பயணம் செய்த கூடலூர் சேரம்பாடியைச் சேர்ந்த செல்வராஜ் (52) அவரது மனைவி விஜயலட்சுமி (45) இவர்களது மகன் கார்த்திக் (28) மகள் கவிதா (19) உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.