உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டைத் தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்களைப் பொருத்தும்பணி இன்று நடைபெற்றது.
உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டைத் தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்களைப் பொருத்தும்பணி இன்று நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதிநடைபெற உள்ளது. எனவே தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாக்குச் சாவடிமையங்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில், தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சியின் சின்னங்கள் அடங்கிய சீட்டுகள் பொருத்தப்படும்.

அதன்படி உடுமலைப்பேட்டைதொகுதியில் 380 வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும், பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக 30 சதவிகித வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும் என 494 வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சின்னங்கள் பொருத்தும்பணி நடைபெற்றது.
உடுமலைப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா, வட்டாட்சியர் ராமலிங்கம் உள்ளிட்டோர் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெற்றன.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதிநடைபெற உள்ளது. எனவே தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாக்குச் சாவடிமையங்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில், தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சியின் சின்னங்கள் அடங்கிய சீட்டுகள் பொருத்தப்படும்.
அதன்படி உடுமலைப்பேட்டைதொகுதியில் 380 வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும், பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக 30 சதவிகித வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும் என 494 வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சின்னங்கள் பொருத்தும்பணி நடைபெற்றது.
உடுமலைப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா, வட்டாட்சியர் ராமலிங்கம் உள்ளிட்டோர் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெற்றன.