பொள்ளாச்சி பிரச்சாரத்தின் போது அதிமுக - திமுக இடையே மோதல்..! துணை சபாநாயகர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஒக்கிலிபாளையம் கிராமத்தில் திமுக பிரச்சாரத்தின் போது அதிமுக - திமுக இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஒக்கிலிபாளையம் கிராமத்தில் திமுக பிரச்சாரத்தின் போது அதிமுக - திமுக இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒக்கிலிபாளையம் கிராமத்தில் நேற்று இரவு திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜனை ஆதரித்து சமூக ஆர்வலர் சபரிமாலா பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு சென்ற சில அதிமுகவினர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஒக்கிலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி கொடுத்த புகாரின் பேரில், பொள்ளாச்சி ஜெயராமன் அவரது மகன் பிரவீன், உதவியாளர் வீராச்சாமி, உள்ளிட்ட 8 பேர் மீது வடக்கிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதே போல, அதிமுக தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திமுகவை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வடக்கிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த ராஜமாணிக்கம், ஜெகதீசன், நாமகிரி ராஜ், ஆகிய நான்கு பேரும் ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக கூறி, இன்று மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் வடக்கிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...