பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களின் பின்னணியில் ஆளும் அதிமுகவினர் இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களின் பின்னணியில் ஆளும் அதிமுகவினர் இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார்.
பொள்ளாச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கே.சுகுமார் மற்றும் வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் முருகராஜ் ஆகியோரை ஆதரித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது டிடிவி தினகரன் பேசியதாவது,
“அமைதியான நகரான பொள்ளாச்சியின் பெயருக்கு அவமானம் ஏற்படும் அளவிற்கு அநீதி இழைக்கப்பட்டது. அதன் பின்னணியில் ஆளும் கட்சியினர் இருக்கின்றனர் என்பதை அறியும் போது மரியாதைக்கும் அன்புக்கும் பெயர்போன கொங்கு மண்டலத்தில் இப்படி எல்லாம் நடக்கின்றது என தமிழ்நாடு முழுவதும் உள்ளவர்கள் வருத்தப்பட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆட்சியில் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
திமுக குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருவதாகவும், ஆளுங்கட்சியினர் 1500 ரூபாய் தருவதாகவும் கூறி மக்களை ஏலம் எடுக்கின்றனர். இலவசங்களை நம்பி ஏமாற வேண்டாம், இவர்கள் கூறியுள்ள இலவசங்கள் எல்லாம் அளிப்பதற்கு வருடத்திற்கு 50,000 கோடி ரூபாய் வேண்டும், அவ்வளவு பணத்துக்கு அவர்கள் எங்கே செல்வார்கள்.
அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் மாட்டிக்கொள்ளட்டும் என்று முதல்வர் இவ்வாறு அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இல்லாமல் திமுகவினர் தவித்து வருகின்றனர். முதல்வர் பழனிசாமி அரசு கஜானாவை தூர்வாரி விட்டது. திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் கஜானாவில் ஒன்றுமில்லை என்பதால் பொது மக்களின் உடமைகள் தான் பறிபோகும் தீய சக்திகளையும் தமிழின துரோகிகளையும் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டியது வாக்காளர்களின் கடமை. தமிழகத்தில் தொழில் புரட்சியை உருவாக்க அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு டிடிவி தினகரன் பரப்புரையில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கே.சுகுமார் மற்றும் வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் முருகராஜ் ஆகியோரை ஆதரித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது டிடிவி தினகரன் பேசியதாவது,
“அமைதியான நகரான பொள்ளாச்சியின் பெயருக்கு அவமானம் ஏற்படும் அளவிற்கு அநீதி இழைக்கப்பட்டது. அதன் பின்னணியில் ஆளும் கட்சியினர் இருக்கின்றனர் என்பதை அறியும் போது மரியாதைக்கும் அன்புக்கும் பெயர்போன கொங்கு மண்டலத்தில் இப்படி எல்லாம் நடக்கின்றது என தமிழ்நாடு முழுவதும் உள்ளவர்கள் வருத்தப்பட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆட்சியில் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
திமுக குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருவதாகவும், ஆளுங்கட்சியினர் 1500 ரூபாய் தருவதாகவும் கூறி மக்களை ஏலம் எடுக்கின்றனர். இலவசங்களை நம்பி ஏமாற வேண்டாம், இவர்கள் கூறியுள்ள இலவசங்கள் எல்லாம் அளிப்பதற்கு வருடத்திற்கு 50,000 கோடி ரூபாய் வேண்டும், அவ்வளவு பணத்துக்கு அவர்கள் எங்கே செல்வார்கள்.
அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் மாட்டிக்கொள்ளட்டும் என்று முதல்வர் இவ்வாறு அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இல்லாமல் திமுகவினர் தவித்து வருகின்றனர். முதல்வர் பழனிசாமி அரசு கஜானாவை தூர்வாரி விட்டது. திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் கஜானாவில் ஒன்றுமில்லை என்பதால் பொது மக்களின் உடமைகள் தான் பறிபோகும் தீய சக்திகளையும் தமிழின துரோகிகளையும் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டியது வாக்காளர்களின் கடமை. தமிழகத்தில் தொழில் புரட்சியை உருவாக்க அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு டிடிவி தினகரன் பரப்புரையில் ஈடுபட்டார்.