கோவை: வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்துக்கு ஆதரவு தெரிவித்து பரப்புரையில் ஈடுபட்டிருந்த மூத்த தலைவர் கோவை தங்கம் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்துக்கு ஆதரவு தெரிவித்து பரப்புரையில் ஈடுபட்டிருந்த மூத்த தலைவர் கோவை தங்கம் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்துக்கு ஆதரவு தெரிவித்து பரப்புரை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் ஆகியோர் வால்பாறை வந்தனர்.

வால்பாறை பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டபின்னர் காந்தி சிலை பேருந்து நிலையம் அருகில் தலைவர்கள் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரப்புரை வாகனத்தில் வேட்பாளர் ஆறுமுகத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசிக் கொண்டிருந்த மூத்த தலைவர் கோவை தங்கம், திடீரென மயக்கமடைந்து விழுந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொண்டர்கள் அவரைத் தூக்கிக் கொண்டு காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் பரப்புரையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கோவை தங்கத்துக்கு உடலின் சக்கரையின் அளவு திடீரென குறைந்ததால் மயங்கி விழுந்ததாகவும் தற்போது உடல்நலம் தேறி வருவதாகவும் திமுக கூட்டணி கட்சியினர் கூறினர். குணம் அடைந்த பின்னர் மீண்டும் அவர் ஆறுமுகத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார் என கோவை தங்கத்தின் மகன் அருள் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்துக்கு ஆதரவு தெரிவித்து பரப்புரை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் ஆகியோர் வால்பாறை வந்தனர்.
வால்பாறை பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டபின்னர் காந்தி சிலை பேருந்து நிலையம் அருகில் தலைவர்கள் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரப்புரை வாகனத்தில் வேட்பாளர் ஆறுமுகத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசிக் கொண்டிருந்த மூத்த தலைவர் கோவை தங்கம், திடீரென மயக்கமடைந்து விழுந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொண்டர்கள் அவரைத் தூக்கிக் கொண்டு காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் பரப்புரையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கோவை தங்கத்துக்கு உடலின் சக்கரையின் அளவு திடீரென குறைந்ததால் மயங்கி விழுந்ததாகவும் தற்போது உடல்நலம் தேறி வருவதாகவும் திமுக கூட்டணி கட்சியினர் கூறினர். குணம் அடைந்த பின்னர் மீண்டும் அவர் ஆறுமுகத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார் என கோவை தங்கத்தின் மகன் அருள் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.