பிரதமர் மோடியுடன் விவாதிக்க கமல் தயார்; ஸ்மிருதி இராணிக்கு மநீம பதிலடி!

சென்னை; பிரதமர் நரேந்திரமோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த மநீம தலைவர் கமல்ஹாசன் தயாராக இருப்பதாக அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சிகே குமரவேல் தெரிவித்துள்ளார்.


சென்னை; பிரதமர் நரேந்திரமோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த மநீம தலைவர் கமல்ஹாசன் தயாராக இருப்பதாக அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சிகே குமரவேல் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து அண்மையில் பரப்புரை மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, வானதி சீனிவாசனுடன் கமல்ஹாசன் நேருக்கு நேராக விவாதம் நடத்த முன் வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் மநீம கொள்கைப் பரப்புச் செயலாளர் சிகே குமரவேல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“வானதி சீனிவாசனின் சவாலை ஏற்றுக் கொள்கின்றோம். இந்திய பிரதமர் நரேந்திரமோடியுடன் எங்கள் தலைவர் கமல்ஹாசன் முதலில் விவாதம் செய்ய விரும்புகிறார். அதனை அடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனும் விவாதம் செய்யவும் விரும்புகிறார்.

அடுத்தடுத்து பாஜக அமைச்சர்கள் ஒவ்வொருவருடனும் விவாதம் செய்து விட்டு, கடைசியாக வானதி சீனிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் விவாதத்தை வைத்துக் கொள்ளலாம். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரதமருடனான நேரடி விவாதத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஏற்கனவே இரண்டு முறை தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு, இப்போது மூன்றாவது முறையாகவும் வானதி சீனிவாசன் தோற்பதற்கு தாயாராகிறார். எந்த ஆளுமையும் இல்லாத அவரோடு விவாதிக்க மநீம மாணவர் அணியே போதுமானது.” இவ்வாறு சி.கே.குமரவேல் கூறி உள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...