திருப்பூர்; பல்லடத்தில் பரப்புரை மேற்கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தீய சக்திகளையும், துரோக சக்திகளையும் விரட்டி அடிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
திருப்பூர்; பல்லடத்தில் பரப்புரை மேற்கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தீய சக்திகளையும், துரோக சக்திகளையும் விரட்டி அடிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட டிடிவி தினகரன், திருப்பூர் தெற்கு தொகுதி விசாலாட்சி, பல்லடம் தொகுதி ஜோதிமணி , காங்கேயம் தொகுதி ரமேஷ் மற்றும் தேமுதிக வேட்பாளர்களான அவிநாசி தொகுதி மீரா, திருப்பூர் வடக்கு தொகுதி செல்வக்குமார் ஆகியோர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது;
“ஆளுங்கட்சி கூட்டணி, தொண்டர்களையும் மக்களையும் நம்பவில்லை. காந்தி தாத்தா படம் போட்ட பணத்தைத்தான் நம்பியுள்ளனர். அவர்கள் தேர்தலில் 50 கோடி ரூபாய் முதலீடு செய்கிறாரகள் என்றால் , அடுத்த 5 வருடத்தில் 5 ஆயிரம் கோடி எடுப்பார்கள். முதல்வர் எடப்பாடி ஆறு குளங்களை தூர்வாருவது போல கஜானாவையும் தூர்வாரிவிட்டார்.

அதே போல் பலநாள் பட்டிணி போல திமுகவினரும் காஞ்ச மாடு கம்மங் காட்டில் புகுந்தது போல் புகுவதற்குத் தயாராக உள்ளனர். நாம் பெருச்சாளிகளை விரட்டுகிறோம் என்று சொல்லிவிட்டு பேய்களை உள்ளே விட்டுவிட கூடாது.
பணத்தின் மூலம் மக்களை தங்கள் காலில் விழ வைத்து விடலாம் என ஆளும்கட்சி நினைக்கிறது. ஆனால் அவர்கள்தான் இந்த தேர்தலில் கீழே விழுந்து மண்ணைக் கவ்வப்போகிறார்கள்.
ஆடு மாடுகளை விலைக்கு வாங்குவது போல மக்களையும் வாங்க முடியும் என நினைக்கின்றனர், அதை முறியடிக்க வேண்டும். தீய சக்திகளையும் , துரோக சக்திகளையும் விரட்டி அடிக்க வேண்டும்.”
இவ்வாறு டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட டிடிவி தினகரன், திருப்பூர் தெற்கு தொகுதி விசாலாட்சி, பல்லடம் தொகுதி ஜோதிமணி , காங்கேயம் தொகுதி ரமேஷ் மற்றும் தேமுதிக வேட்பாளர்களான அவிநாசி தொகுதி மீரா, திருப்பூர் வடக்கு தொகுதி செல்வக்குமார் ஆகியோர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது;
“ஆளுங்கட்சி கூட்டணி, தொண்டர்களையும் மக்களையும் நம்பவில்லை. காந்தி தாத்தா படம் போட்ட பணத்தைத்தான் நம்பியுள்ளனர். அவர்கள் தேர்தலில் 50 கோடி ரூபாய் முதலீடு செய்கிறாரகள் என்றால் , அடுத்த 5 வருடத்தில் 5 ஆயிரம் கோடி எடுப்பார்கள். முதல்வர் எடப்பாடி ஆறு குளங்களை தூர்வாருவது போல கஜானாவையும் தூர்வாரிவிட்டார்.
அதே போல் பலநாள் பட்டிணி போல திமுகவினரும் காஞ்ச மாடு கம்மங் காட்டில் புகுந்தது போல் புகுவதற்குத் தயாராக உள்ளனர். நாம் பெருச்சாளிகளை விரட்டுகிறோம் என்று சொல்லிவிட்டு பேய்களை உள்ளே விட்டுவிட கூடாது.
பணத்தின் மூலம் மக்களை தங்கள் காலில் விழ வைத்து விடலாம் என ஆளும்கட்சி நினைக்கிறது. ஆனால் அவர்கள்தான் இந்த தேர்தலில் கீழே விழுந்து மண்ணைக் கவ்வப்போகிறார்கள்.
ஆடு மாடுகளை விலைக்கு வாங்குவது போல மக்களையும் வாங்க முடியும் என நினைக்கின்றனர், அதை முறியடிக்க வேண்டும். தீய சக்திகளையும் , துரோக சக்திகளையும் விரட்டி அடிக்க வேண்டும்.”
இவ்வாறு டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.