நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபடத் தெரிவித்தார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபடத் தெரிவித்தார்.

அதிமுக சார்பில் போடட்டியிடும் உதகை வேட்பாளர் போஜராஜன், குன்னூர் வேட்பாளர் கப்பச்சி வினோத் ஆகியோரை ஆதரித்து உதகை, குன்னூர் கோத்தகிரியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி சனிக்கிழமை பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரையில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது;<\b>
“திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு போதும் முதல்வர் ஆக முடியாது கடந்த 2006-ம் ஆண்டில் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் மக்களைப் பற்றிய அக்கறை இல்லாமல் இருந்தார்.
இப்போது முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட்டு கனவு காண்கிறார். எங்கு சென்றாலும் முதல்வரைப் பற்றி குறை கூறிக்கொண்டே இருக்கிறார். அதிகாலை முதல் இரவு வரை மக்களின் பிரச்சனைகளுக்காக முதல்வர் நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் தனி கவனம் செலுத்தி அனைத்து திட்டங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு ரூபாய் 2500 வழங்கியது.
தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து இலவசத் திட்டங்களும் ஒவ்வொரு மக்களையும் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் உதகை, கூடலூர், மற்றும் குன்னூர் தொகுதிகளின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.” இவ்வாறு எஸ்.பி.வேலுமணி பேசினார்.
குன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் முதல்வருக்கு வாக்களிக்கத் தயாராகி விட்டனர். மக்களிடம் வரவேற்ப்பு அதிகரித்துள்ளது. மீண்டும் அம்மா ஆட்சி அமைவது உறுதி. நீலகிரியில் உள்ள மூன்று தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி” என்றார்.
அதிமுக சார்பில் போடட்டியிடும் உதகை வேட்பாளர் போஜராஜன், குன்னூர் வேட்பாளர் கப்பச்சி வினோத் ஆகியோரை ஆதரித்து உதகை, குன்னூர் கோத்தகிரியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி சனிக்கிழமை பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரையில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது;<\b>
“திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு போதும் முதல்வர் ஆக முடியாது கடந்த 2006-ம் ஆண்டில் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் மக்களைப் பற்றிய அக்கறை இல்லாமல் இருந்தார்.
இப்போது முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட்டு கனவு காண்கிறார். எங்கு சென்றாலும் முதல்வரைப் பற்றி குறை கூறிக்கொண்டே இருக்கிறார். அதிகாலை முதல் இரவு வரை மக்களின் பிரச்சனைகளுக்காக முதல்வர் நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் தனி கவனம் செலுத்தி அனைத்து திட்டங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு ரூபாய் 2500 வழங்கியது.
தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து இலவசத் திட்டங்களும் ஒவ்வொரு மக்களையும் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் உதகை, கூடலூர், மற்றும் குன்னூர் தொகுதிகளின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.” இவ்வாறு எஸ்.பி.வேலுமணி பேசினார்.
குன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் முதல்வருக்கு வாக்களிக்கத் தயாராகி விட்டனர். மக்களிடம் வரவேற்ப்பு அதிகரித்துள்ளது. மீண்டும் அம்மா ஆட்சி அமைவது உறுதி. நீலகிரியில் உள்ள மூன்று தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி” என்றார்.