வால்பாறை: வால்பாறையில் பஸ்சின் முன்னே ஓடிச்சென்று சாலையோரம் பரிதவித்து நின்ற சிறுத்தைக் குட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
வால்பாறை: வால்பாறையில் பஸ்சின் முன்னே ஓடிச்சென்று சாலையோரம் பரிதவித்து நின்ற சிறுத்தைக் குட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது சிறுத்தைகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன. இன்றும், நேற்றும் நடுமலை எஸ்டேட் பகுதியில் உள்ள சாலையில் வால்பாறையிலிருந்து அக்காமலை எஸ்டேட் பகுதிக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென இரண்டு சிறுத்தைக் குட்டிகள் பஸ்சின் முன்னே சாலையில் ஓடியது.

இதைப்பார்த்த ஓட்டுனர் சிறுத்தையை பாதுகாக்க பேருந்தை நிறுத்திவிட்டார். அப்போது மண்சுவர்மீது சிறுத்தைக் குட்டி ஏறமுடியாமல் சிறிதுநேரம் தத்தளித்து பின்பு கீழிறங்கி சாலையின் மறுபுறம் உள்ள தேயிலைச் செடிகளுக்குள் சென்று மறைந்தது. சில விநாடிகளில் மறைந்திருந்து கண்காணித்த அந்த சிறுத்தைக் குட்டியின் தாய் சிறுத்தையும் நொடிப்பொழுதில் தாவிச் சென்றது.
இதைப்பார்த்த பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். ஆனாலும் சிறுத்தைக் குட்டிகள் பாதுகாப்பாக சென்றபின்பு பேருந்தை ஓட்டுனர் ஓட்டிச் சென்றார். இதனால் பயணிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது சிறுத்தைகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன. இன்றும், நேற்றும் நடுமலை எஸ்டேட் பகுதியில் உள்ள சாலையில் வால்பாறையிலிருந்து அக்காமலை எஸ்டேட் பகுதிக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென இரண்டு சிறுத்தைக் குட்டிகள் பஸ்சின் முன்னே சாலையில் ஓடியது.
இதைப்பார்த்த ஓட்டுனர் சிறுத்தையை பாதுகாக்க பேருந்தை நிறுத்திவிட்டார். அப்போது மண்சுவர்மீது சிறுத்தைக் குட்டி ஏறமுடியாமல் சிறிதுநேரம் தத்தளித்து பின்பு கீழிறங்கி சாலையின் மறுபுறம் உள்ள தேயிலைச் செடிகளுக்குள் சென்று மறைந்தது. சில விநாடிகளில் மறைந்திருந்து கண்காணித்த அந்த சிறுத்தைக் குட்டியின் தாய் சிறுத்தையும் நொடிப்பொழுதில் தாவிச் சென்றது.
இதைப்பார்த்த பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். ஆனாலும் சிறுத்தைக் குட்டிகள் பாதுகாப்பாக சென்றபின்பு பேருந்தை ஓட்டுனர் ஓட்டிச் சென்றார். இதனால் பயணிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.