கோவை: தேங்காய்க்கு ஆண்டு முழுவதும் சீரான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சி தொகுதி அமமுக வேட்பாளர் சுகுமார் உறுதி அளித்துள்ளார்.
கோவை: தேங்காய்க்கு ஆண்டு முழுவதும் சீரான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சி தொகுதி அமமுக வேட்பாளர் சுகுமார் உறுதி அளித்துள்ளார்.
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் சுகுமார் தனது ஆதரவாளர்களுடன் பொள்ளாச்சி நகரப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது திமுக, அதிமுகவிற்கு மாற்றாக மக்கள் அமமுகவிற்கு செல்லும் இடங்களில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கின்றனர். தன்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் பொள்ளாச்சி மக்களின் பல்லாண்டு ஆண்டுகள் கோரிக்கையான பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், தென்னை நகரமான பொள்ளாச்சியில் விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான ஆண்டு முழுவதும் தேங்காய்க்கு சீரான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தென்னை சார்ந்த பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி ஆவதால் பின்னலாடை நகரம் திருப்பூரைப் போல பொள்ளாச்சியை ஏற்றுமதி நகரமாக உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் சுகுமார் தனது ஆதரவாளர்களுடன் பொள்ளாச்சி நகரப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது திமுக, அதிமுகவிற்கு மாற்றாக மக்கள் அமமுகவிற்கு செல்லும் இடங்களில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கின்றனர். தன்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் பொள்ளாச்சி மக்களின் பல்லாண்டு ஆண்டுகள் கோரிக்கையான பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், தென்னை நகரமான பொள்ளாச்சியில் விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான ஆண்டு முழுவதும் தேங்காய்க்கு சீரான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தென்னை சார்ந்த பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி ஆவதால் பின்னலாடை நகரம் திருப்பூரைப் போல பொள்ளாச்சியை ஏற்றுமதி நகரமாக உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.