வால்பாறையில், பறக்கும் படை வாகனத்தை செலவின மேற்பார்வையாளர் கண்காணிப்பு: ஆவணங்களை திடீர் சோதனை செய்தார்!

வால்பாறை: வால்பாறையில், பறக்கும் படை வாகனத்தை செலவின மேற்பார்வையாளர் கண்காணித்தார். அத்துடன் அவர் ஆவணங்களை திடீரென சோதனை செய்தார்.


வால்பாறை: வால்பாறையில், பறக்கும் படை வாகனத்தை செலவின மேற்பார்வையாளர் கண்காணித்தார். அத்துடன் அவர் ஆவணங்களை திடீரென சோதனை செய்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் 2021-ம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வால்பாறை பகுதியில் சாலையில் செல்லும் வாகனங்களை அவர்கள் தடுத்து நிறுத்தி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதையும், அவற்றை சோதனை செய்து பறிமுதல் செய்வதையும் வீடியோ பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வால்பாறை வந்த கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் ராம் கிருஷ் கேடியா ஐ.ஆர்.எஸ். குறிப்பிட்ட பறக்கும்படை வாகனத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார். வால்பாறை நகராட்சி அலுவலகம் அருகே அந்த வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்தார். அதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 15 வாகனங்கள் மட்டும் சோதனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பல வாகனங்களை சோதனை செய்யாமலும் அனுப்பப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த பறக்கும்படை அதிகாரியிடம் செலவின பார்வையாளர் என்னுடைய வாகனமாக இருந்தாலும் சரி, எந்த அதிகாரி வாகனமாக இருந்தாலும் சரி அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்து வீடியோ எடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...