கோவை: தி.மு.க. ஆட்சியின்போது இருட்டில் இருந்த தமிழகம் அ.தி.மு.க. ஆட்சியில் மின் மிகை மாநிலமாக ஜொலிக்கிறது என்று கணபதியில் தேர்தல் பிரசாரம் செய்த அம்மன் அர்ஜுனன் பெருமிதத்துடன் கூறினார்.
கோவை: தி.மு.க. ஆட்சியின்போது இருட்டில் இருந்த தமிழகம் அ.தி.மு.க. ஆட்சியில் மின் மிகை மாநிலமாக ஜொலிக்கிறது என்று கணபதியில் தேர்தல் பிரசாரம் செய்த அம்மன் அர்ஜுனன் பெருமிதத்துடன் கூறினார்.
கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். அவர் ரத்தினபுரி சக்தி சாலையில் பாலம் அருகே உள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து திறந்த வேனில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றுவார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான். ஆனால் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றும் கட்சி தி.மு.க. எனவே தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. அந்தக் கட்சியை மக்கள் புறக்கணித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
கோவை கணபதியில் ஆயிரக்கணக்கான சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளனர். இடநெருக்கடி, வாடகை உயர்வு போன்ற பிரச்சினைகளால் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. எனவே சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வசதிக்காக கணபதியில் ஒருங்கிணைந்த தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம் தொழில்முனைவோர் பெரிதும் பயனடைவார்கள்.
கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் மின்வெட்டு தலைவிரித்தாடியது. இதனால் தொழிற்சாலை தொழில்துறையினரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அத்தகைய மின்வெட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஏற்படும் கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு என்பதே கிடையாது, மின்மிகை மாநிலமாக ஜொலிக்கிறது. எனவே தொழிற்சாலை என தொழில்துறையினர் சிந்தித்து அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்தின்போது முன்னாள் கவுன்சிலர் பிரபாகரன், கமலா பிரஸ் ராஜு, ஆர்.கே.செந்தில்வேல், பாபுஜி சுவாமிகள், கணபதி ஆனந்த், டென்மார்க் ரமேஷ் சந்திரசேகர், பாப்பையா ராஜேஷ், கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.
கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். அவர் ரத்தினபுரி சக்தி சாலையில் பாலம் அருகே உள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து திறந்த வேனில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றுவார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான். ஆனால் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றும் கட்சி தி.மு.க. எனவே தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. அந்தக் கட்சியை மக்கள் புறக்கணித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
கோவை கணபதியில் ஆயிரக்கணக்கான சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளனர். இடநெருக்கடி, வாடகை உயர்வு போன்ற பிரச்சினைகளால் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. எனவே சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வசதிக்காக கணபதியில் ஒருங்கிணைந்த தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம் தொழில்முனைவோர் பெரிதும் பயனடைவார்கள்.
கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் மின்வெட்டு தலைவிரித்தாடியது. இதனால் தொழிற்சாலை தொழில்துறையினரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அத்தகைய மின்வெட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஏற்படும் கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு என்பதே கிடையாது, மின்மிகை மாநிலமாக ஜொலிக்கிறது. எனவே தொழிற்சாலை என தொழில்துறையினர் சிந்தித்து அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்தின்போது முன்னாள் கவுன்சிலர் பிரபாகரன், கமலா பிரஸ் ராஜு, ஆர்.கே.செந்தில்வேல், பாபுஜி சுவாமிகள், கணபதி ஆனந்த், டென்மார்க் ரமேஷ் சந்திரசேகர், பாப்பையா ராஜேஷ், கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.