கோவை: கோவையில் புதிய வாக்காளர் அட்டை வீட்டிற்கே சென்று விநியோகம் செய்வதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை: கோவையில் புதிய வாக்காளர் அட்டை வீட்டிற்கே சென்று விநியோகம் செய்வதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்களுக்கு, வாக்காளர் அட்டை தபால்துறை மூலம் நேரடியாக வீட்டுக்கே விநியோகம் செய்யப்படுகிறது.
தேர்தல் ஆணையம் சார்பில் கோவை மாவட்டத்தின், 10 தொகுதிகளுக்கு சுமார், ஒரு லட்சத்து 33 ஆயிரம் புதிய வாக்காளர் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், தலைமை தபால் நிலையத்திலிருந்து அந்தந்த பட்டுவாடா தபால்நிலையங்களுக்கு, முழுமையாக வினியோகம் செய்யப்பட்டு விட்டது. மொத்த கார்டுகளில், 90 சதவீதம் வாக்காளர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மீதி உள்ள அட்டைகள், சரியான முகவரி இல்லாதவை என அனைத்தும், இந்த வார இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும் என, தபால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்களுக்கு, வாக்காளர் அட்டை தபால்துறை மூலம் நேரடியாக வீட்டுக்கே விநியோகம் செய்யப்படுகிறது.
தேர்தல் ஆணையம் சார்பில் கோவை மாவட்டத்தின், 10 தொகுதிகளுக்கு சுமார், ஒரு லட்சத்து 33 ஆயிரம் புதிய வாக்காளர் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், தலைமை தபால் நிலையத்திலிருந்து அந்தந்த பட்டுவாடா தபால்நிலையங்களுக்கு, முழுமையாக வினியோகம் செய்யப்பட்டு விட்டது. மொத்த கார்டுகளில், 90 சதவீதம் வாக்காளர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மீதி உள்ள அட்டைகள், சரியான முகவரி இல்லாதவை என அனைத்தும், இந்த வார இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும் என, தபால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.