மருந்து விற்பனையாளர் வீட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு: கோவையில் துணிகரம்!

கோவை: கோவையில் மருந்து விற்பனைப் பிரதிநிதி வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருடிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவையில் மருந்து விற்பனைப் பிரதிநிதி வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருடிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கணபதி மாநகரைச் சேர்ந்தவர் புகழ் வேந்தன் (வயது 36). மருந்து வியாபாரியான இவர் நேற்று குடும்பத்துடன் மதுரையில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து கோவையில் உள்ள அவரது வீட்டின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிலர் புகழ் வேந்தனுக்கு போன் செய்தார்களாம். அப்போது அவர்கள் உங்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது, வந்து பாருங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

இதையடுத்து கோவை திரும்பிய அவர் இன்று வந்து பார்த்தபோது கதவு திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 19 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த புகழ்வேந்தன் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்தனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...