கோவை: தவணைத்தொகை கட்டாததால் அனுமதியின்றி காரை எடுத்துச்சென்ற வங்கி நபர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை எஸ்.பி.யிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை: தவணைத்தொகை கட்டாததால் அனுமதியின்றி காரை எடுத்துச்சென்ற வங்கி நபர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை எஸ்.பி.யிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை ஒண்டிப்புதூரை அடுத்த பட்டணம் புதூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் எம்.அய்யாவு. இவரது கார் கடந்த மாதம் திருட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசில் புகார் கொடுப்பதற்கு முன் அவர் கார் வாங்குவதற்காக லோன் வாங்கியிருந்த தனியார் வங்கியைச் சேர்ந்த நபருக்கு தகவல் தெரிவிப்பதற்காக அழைத்தபோது தவணைத்தொகை செலுத்தாததால் காரை எடுத்துச் சென்று விட்டதாக கூறியிருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தவணைத் தொகை செலுத்தாததால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் காரின் உரிமையாளர் இல்லாத நேரம்பார்த்து காரை எடுத்துச் சென்றுவிட்டதாக சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் வங்கியைச் சேர்ந்த நபர்மீது அய்யாவு குற்றம்சாட்டினார்.

இதையடுத்து தவணைத் தொகை 85 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தியபிறகும் தனது காரை திருப்பிக் கொடுக்கவில்லை என்று சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையம் சார்பில் சரியாக விசாரிக்காததால் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அய்யாவு நேரடியாக புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் தனது அனுமதியின்றி காரை எடுத்துச் சென்ற நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவதாக எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
கோவை ஒண்டிப்புதூரை அடுத்த பட்டணம் புதூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் எம்.அய்யாவு. இவரது கார் கடந்த மாதம் திருட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசில் புகார் கொடுப்பதற்கு முன் அவர் கார் வாங்குவதற்காக லோன் வாங்கியிருந்த தனியார் வங்கியைச் சேர்ந்த நபருக்கு தகவல் தெரிவிப்பதற்காக அழைத்தபோது தவணைத்தொகை செலுத்தாததால் காரை எடுத்துச் சென்று விட்டதாக கூறியிருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் தவணைத் தொகை செலுத்தாததால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் காரின் உரிமையாளர் இல்லாத நேரம்பார்த்து காரை எடுத்துச் சென்றுவிட்டதாக சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் வங்கியைச் சேர்ந்த நபர்மீது அய்யாவு குற்றம்சாட்டினார்.
இதையடுத்து தவணைத் தொகை 85 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தியபிறகும் தனது காரை திருப்பிக் கொடுக்கவில்லை என்று சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையம் சார்பில் சரியாக விசாரிக்காததால் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அய்யாவு நேரடியாக புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் தனது அனுமதியின்றி காரை எடுத்துச் சென்ற நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவதாக எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.