கோவை: சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கேஆர் ஜெயராம் இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை: சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கேஆர் ஜெயராம் இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் இடையே நம்மிடம். பேசிய வேட்பாளர் கே ஆர் ஜெயராம், கடந்த 2016 தேர்தலில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் திமுகவுக்கு வாய்ப்பு அளித்தனர். ஆனால், அந்தக் கட்சியின் எம்எல்ஏ கார்த்திக் தொகுதி வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வாக்காளர்கள் என்னிடம் தங்கள் தொகுதியில் திமுக எம்எல்ஏவை பார்த்ததே இல்லை என்று கூறுகின்றனர். அந்த அளவுக்கு அவரது செயல்பாடு மோசமாக இருந்துள்ளது.
அவரால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருந்த நிலையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி உத்தரவின்பேரில் சிங்காநல்லூர் தொகுதி திமுக வெற்றி பெற்ற தொகுதி என்று எந்த பாரபட்சமும் பாராமல், அந்த தொகுதியில் உள்ள மக்களுக்கு அனைத்து நல உதவி பொருட்களும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எங்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் எங்கள் கட்சி சார்பில் நான் உள்ளிட்ட. அனைத்து கழக தோழர்களும் இணைந்து மக்களுக்கு தேவையான நல உதவி பொருட்கள் வீடு வீடாக சென்று வழங்கினோம். தற்போது, அந்த நன்றியை மக்கள் நினைத்துப் பார்த்து நான் செல்லும் இடங்களிலெல்லாம் என்னை வாழ்த்தி வரவேற்கின்றனர்.

நான் வெற்றி பெற்றவுடன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மக்கள் கூட்டம் நடத்தப்பட்டு நிறை, குறை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்த மக்களுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வேன்.
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தற்போது காணப்படும் அனைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண துரித நடவடிக்கை எடுப்பேன், இவ்வாறு அவர் கூறினார்.
பிரச்சாரத்தின் இடையே நம்மிடம். பேசிய வேட்பாளர் கே ஆர் ஜெயராம், கடந்த 2016 தேர்தலில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் திமுகவுக்கு வாய்ப்பு அளித்தனர். ஆனால், அந்தக் கட்சியின் எம்எல்ஏ கார்த்திக் தொகுதி வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வாக்காளர்கள் என்னிடம் தங்கள் தொகுதியில் திமுக எம்எல்ஏவை பார்த்ததே இல்லை என்று கூறுகின்றனர். அந்த அளவுக்கு அவரது செயல்பாடு மோசமாக இருந்துள்ளது.
அவரால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருந்த நிலையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி உத்தரவின்பேரில் சிங்காநல்லூர் தொகுதி திமுக வெற்றி பெற்ற தொகுதி என்று எந்த பாரபட்சமும் பாராமல், அந்த தொகுதியில் உள்ள மக்களுக்கு அனைத்து நல உதவி பொருட்களும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எங்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் எங்கள் கட்சி சார்பில் நான் உள்ளிட்ட. அனைத்து கழக தோழர்களும் இணைந்து மக்களுக்கு தேவையான நல உதவி பொருட்கள் வீடு வீடாக சென்று வழங்கினோம். தற்போது, அந்த நன்றியை மக்கள் நினைத்துப் பார்த்து நான் செல்லும் இடங்களிலெல்லாம் என்னை வாழ்த்தி வரவேற்கின்றனர்.
நான் வெற்றி பெற்றவுடன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மக்கள் கூட்டம் நடத்தப்பட்டு நிறை, குறை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்த மக்களுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வேன்.
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தற்போது காணப்படும் அனைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண துரித நடவடிக்கை எடுப்பேன், இவ்வாறு அவர் கூறினார்.