கோவை: பொள்ளாச்சியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பெண் விடுதலை கட்சி தலைவர் சபரிமாலா சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
கோவை: பொள்ளாச்சியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பெண் விடுதலை கட்சி தலைவர் சபரிமாலா சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகரும், பெண் விடுதலை கட்சி தலைவருமான சபரிமாலா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஆனால், வேட்புமனு பரிசீலனையில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று பொள்ளாச்சி திமுக தேர்தல் அலுவலகத்தில் சபரிமாலா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது சபரிமாலா அளித்த பேட்டியின்போது, தனது வேட்பு மனுவை அதிகாரிகள் திட்டமிட்டு நிராகரித்துள்ளதாகவும், இப்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியில் அராஜகம், அடக்குமுறையை ஒழிக்க வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது. பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படாது.
எனவே, சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் வரதராஜனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதாகவும். பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள், தனி காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து மக்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகரும், பெண் விடுதலை கட்சி தலைவருமான சபரிமாலா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஆனால், வேட்புமனு பரிசீலனையில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று பொள்ளாச்சி திமுக தேர்தல் அலுவலகத்தில் சபரிமாலா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது சபரிமாலா அளித்த பேட்டியின்போது, தனது வேட்பு மனுவை அதிகாரிகள் திட்டமிட்டு நிராகரித்துள்ளதாகவும், இப்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியில் அராஜகம், அடக்குமுறையை ஒழிக்க வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது. பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படாது.
எனவே, சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் வரதராஜனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதாகவும். பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள், தனி காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து மக்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.