கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்கும் வேளையில் பறக்கும் படையினர் அனைத்து பகுதிகளிலும் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், பறக்கும் படையைச் சேர்ந்த கணேஷ் குமார் அதிகாரிகளுடன் கோவை தொண்டாமுத்தூர் உட்பட்ட பொன்னையராஜபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது, மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் உரிய ஆவணம் இல்லாமல் 4 லட்ச ரூபாயை எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, அதனை பறிமுதல் செய்து தெற்கு தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில் அரசிடம் ஒப்படைத்தார். மேலும், இதற்கான உரிய ஆவணத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பித்த பிறகே பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனர்.
சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்கும் வேளையில் பறக்கும் படையினர் அனைத்து பகுதிகளிலும் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், பறக்கும் படையைச் சேர்ந்த கணேஷ் குமார் அதிகாரிகளுடன் கோவை தொண்டாமுத்தூர் உட்பட்ட பொன்னையராஜபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது, மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் உரிய ஆவணம் இல்லாமல் 4 லட்ச ரூபாயை எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, அதனை பறிமுதல் செய்து தெற்கு தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில் அரசிடம் ஒப்படைத்தார். மேலும், இதற்கான உரிய ஆவணத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பித்த பிறகே பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனர்.