கோவை: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிட கூடிய அம்மன் கே. அர்ஜுனன் கோவை கணபதி பகுதிகளில் உள்ள தெருக்களில் வீதி வீதியாகச் சென்று அரசின் திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார்.
கோவை: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிட கூடிய அம்மன் கே. அர்ஜுனன் கோவை கணபதி பகுதிகளில் உள்ள தெருக்களில் வீதி வீதியாக சென்று அரசின் திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார்.
கோவை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இன்று காலை கட்சி நிர்வாகிகளுடன் கோவை கணபதி 3 நம்பர் பேருந்து நிலையம், கோபால்சாமி கோயில் வீதி, சங்கனூர் ரோடு, பெரிய கடை வீதி, மணியகாரம் பாளையம், அண்ணா நகர், வெங்கடேசபுரம், சி.எம்.எஸ் பின்புறம், கட்டபொம்மன் வீதி, ஆகிய பகுதிகளுக்கு வாக்கு கேட்டுச் சென்றார்.
அப்பொழுது அவருடன் அதிமுக கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் வாசலில் கோலமிட்டு உற்சாகத்தோடு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
வாக்கு சேகரிப்பின் போது அம்மன் அர்ஜுனன் பேசும்போது:-
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய ஆசிபெற்ற சின்னம் இரட்டை இலை. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அம்மாவின் கனவை நிறைவேற்றும் வகையில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் திருமணமாகிச் செல்லும் வரை பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து செயல்படுத்தி காட்டிக்கொண்டு உள்ளது என்றார்.
வருகிற தேர்தலில் பெண்களுக்கு வாசிங்மிசின் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொேரானா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தில் மக்களுடைய நலனை பாதுகாக்க அதிமுக அரசு என பல்வேறு நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார். அதிமுக மகளிர் அணியைச் சேர்ந்த லீலாவதி உண்ணி கமலா பிரைசராஜ், லக்கி சண்முகம் உட்பட பலர் இருந்தனர்.
கோவை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இன்று காலை கட்சி நிர்வாகிகளுடன் கோவை கணபதி 3 நம்பர் பேருந்து நிலையம், கோபால்சாமி கோயில் வீதி, சங்கனூர் ரோடு, பெரிய கடை வீதி, மணியகாரம் பாளையம், அண்ணா நகர், வெங்கடேசபுரம், சி.எம்.எஸ் பின்புறம், கட்டபொம்மன் வீதி, ஆகிய பகுதிகளுக்கு வாக்கு கேட்டுச் சென்றார்.
அப்பொழுது அவருடன் அதிமுக கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் வாசலில் கோலமிட்டு உற்சாகத்தோடு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
வாக்கு சேகரிப்பின் போது அம்மன் அர்ஜுனன் பேசும்போது:-
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய ஆசிபெற்ற சின்னம் இரட்டை இலை. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அம்மாவின் கனவை நிறைவேற்றும் வகையில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் திருமணமாகிச் செல்லும் வரை பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து செயல்படுத்தி காட்டிக்கொண்டு உள்ளது என்றார்.
வருகிற தேர்தலில் பெண்களுக்கு வாசிங்மிசின் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொேரானா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தில் மக்களுடைய நலனை பாதுகாக்க அதிமுக அரசு என பல்வேறு நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார். அதிமுக மகளிர் அணியைச் சேர்ந்த லீலாவதி உண்ணி கமலா பிரைசராஜ், லக்கி சண்முகம் உட்பட பலர் இருந்தனர்.