கோவை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு தொடையில் புற்றுநோய் கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு தொடையில் புற்றுநோய் கட்டியை அகற்றி சாதனை படைத்த மருத்துவர்களுக்கு டீன் பாராட்டு தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு தொடையில் புற்றுநோய் கட்டியை அகற்றி சாதனை படைத்த மருத்துவர்களுக்கு டீன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில், இளம்பெண்ணின் தொடை எலும்பில் இருந்த புற்றுநோய் கட்டி, அதிநவீன சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

ஊட்டியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், வலது தொடையில் பெரிய கட்டியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



பரிசோதனையில், தொடையில் எலும்பு முறிவு ஏற்படக்கூடிய வகையில், கட்டி இருப்பது தெரியவந்தது.



இதையடுத்து, அறுவை சிகிச்சை வாயிலாக, கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

இதுகுறித்து, மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:

பெண்ணின் தொடையில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்ற வேண்டும் என்றால், தொடைக்கு கீழே காலை முழுவதும் அகற்ற வேண்டிய நிலை உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவ குழுவினர் ஆலோசனை செய்து, ஊனம் ஏற்படாத வகையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதற்காக, தசைகளை பலப்படுத்தும் இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுதவிர, தொடை எலும்பின் அச்சு அசலான மாதிரிகள் எடுக்கப்பட்டு, எலும்பு வடிவிலான உலோக மாதிரி, துல்லியமாக வடிவமைக்கப்பட்டது. பின்னர், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அதி நவீன ஊனமில்லா எலும்பு புற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, தொடையில் பாதிக்கப்பட்ட எலும்பு அகற்றப்பட்டு, உலோகம் பொருத்தப்பட்டுள்ளது,

தொடர்ந்து கால் தசைகளை பலப்படுத்தி, நடப்பதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை டாக்டர் சுரேஷ் வெங்கடாசலம், எலும்பியல் துறை டாக்டர் வெற்றிவேல் செழியன், மயக்கவியல் துறை டாக்டர் கல்யாண சுந்தரம் ஆகியோர் அடங்கிய குழுவினர், இந்த சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...