கோவை: கோவை பீளமேட்டில் இயங்கி வரும் சென்டரல்பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் இருவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கி இரு நாட்கள் மூடப்பட்டது.
கோவை: கோவை பீளமேட்டில் இயங்கி வரும் சென்றல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் இருவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கி இரு நாட்கள் மூடப்பட்டது.
கடந்த இரு நாட்களுக்கு பிறகு வங்கி திறக்கப்பட்ட நிலையில் மேலும் இரு ஊழியர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரொனா தொற்றினால் வங்கி ஊழியர்கள் 4 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் வங்கி மூடப்பட்டது. வாடிக்கையாளர்கள் சென்ட்ரல் பேங்க் அப் இந்தியாவின் ஆவராம்பாளையம் மற்றும் காளப்பட்டியிலுள்ள கிளையை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோவையில் கொரொனாவின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் கவனமாக அரசு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.