பொள்ளாச்சி: பொள்ளாச்சி பெரியார் காலனியில் அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு சேகரித்தார்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பெரியார் காலனியில் அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு சேகரித்தார்.

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று காலை பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 30-வது வார்டு 31-வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் காலனி, மணியார் காலனி, சேரன் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதியில் உள்ள பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும் வரவேற்பு அளித்தனர்.
ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சி பகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு ஜெயராமன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று காலை பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 30-வது வார்டு 31-வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் காலனி, மணியார் காலனி, சேரன் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதியில் உள்ள பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும் வரவேற்பு அளித்தனர்.
ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சி பகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு ஜெயராமன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.