வால்பாறையில் கட்டட பணிக்காக கலவை ஏற்றிவந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் தார் ரோடு சீரமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வழக்கமாக கீழ்ப்பகுதியில் இருந்து லாரிகளின் மூலம் எம்சான்ட் என்ற மணல் போன்ற கலவை கொண்டு வரப்படுகிறது. அதேபோல, இன்று எம்சான்ட் கலவை பொள்ளாச்சிமிலிருந்து வால்பாறைக்கு டிப்பர் லாரியில் கொண்டுவந்த போது, வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் என்ற பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி கலவையோடு சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இதில் ஓட்டுனர் ரவிச்சந்திரன் வயது 49 என்பவர், சிறுகாயங்களுடன்அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருக்கு, வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த விபத்து பற்றி வால்பாறை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கமாக கீழ்ப்பகுதியில் இருந்து லாரிகளின் மூலம் எம்சான்ட் என்ற மணல் போன்ற கலவை கொண்டு வரப்படுகிறது. அதேபோல, இன்று எம்சான்ட் கலவை பொள்ளாச்சிமிலிருந்து வால்பாறைக்கு டிப்பர் லாரியில் கொண்டுவந்த போது, வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் என்ற பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி கலவையோடு சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில் ஓட்டுனர் ரவிச்சந்திரன் வயது 49 என்பவர், சிறுகாயங்களுடன்அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருக்கு, வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த விபத்து பற்றி வால்பாறை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.