பூங்கா இடத்தை மீட்டு தருபவர்களுக்கு தான் எங்கள் ஓட்டு - கிணத்துக்கடவு தொகுதி மக்கள் பிளக்ஸ் வைத்து அதிரடி..!
35 வருடமாக பயன்படுத்தி வந்த பூங்கா இடத்தை மீட்டு கொடுப்போம் என்று உறுதி அளிக்கும் அரசியல் கட்சி வேட்பாளருக்கு தான் வாக்கு அளிக்கப் போவதாக, போத்தனூர் அருகே பொது அறிவிப்பு பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட போத்தனூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சத்திய சாய் நகர், சத்திய நாராயண நகர், பாத்திமா உம்மர் அவென்யூ குடியிருப்பு பகுதியில் சிறுவர் பூங்கா மற்றும் முதியோர், இளைஞர் நடைப்பயிற்சி தளமாக கடந்த 35 வருடமாக அப்பகுதி பொது மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் பூங்கா அமைந்துள்ள இடத்தில் தற்போது கழிவு நீர் உந்து நிலையம் அமைத்து வருகின்றனர்.
எனவே, மக்கள் பயன்படுத்தி வந்த பூங்கா இடத்தை மீட்க கடந்த மூன்று வருடமாக அரசிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால், ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களில், பூங்கா இடத்தை மீட்டு கொடுப்பேன் என்று உறுதி அளிப்பவர்களுக்கு தான் எங்கள் வாக்கு என கூறி பெரிய பிளக்ஸ் வைத்துள்ளனர், அப்பகுதி பொது மக்கள்.

கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட போத்தனூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சத்திய சாய் நகர், சத்திய நாராயண நகர், பாத்திமா உம்மர் அவென்யூ குடியிருப்பு பகுதியில் சிறுவர் பூங்கா மற்றும் முதியோர், இளைஞர் நடைப்பயிற்சி தளமாக கடந்த 35 வருடமாக அப்பகுதி பொது மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் பூங்கா அமைந்துள்ள இடத்தில் தற்போது கழிவு நீர் உந்து நிலையம் அமைத்து வருகின்றனர்.
எனவே, மக்கள் பயன்படுத்தி வந்த பூங்கா இடத்தை மீட்க கடந்த மூன்று வருடமாக அரசிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால், ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களில், பூங்கா இடத்தை மீட்டு கொடுப்பேன் என்று உறுதி அளிப்பவர்களுக்கு தான் எங்கள் வாக்கு என கூறி பெரிய பிளக்ஸ் வைத்துள்ளனர், அப்பகுதி பொது மக்கள்.