கவுண்டம்பாளையம் வேட்பாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் மீது தகுதியிழப்பு நடவடிக்கை எடுக்க கோரி, திமுக வழக்கறிஞர்கள் அணியினர் ஆட்சியரிடம் மனு

திமுக வேட்பாளர் மீது அவதூறு பரப்புவதாக கூறி அ.இ.அ.தி.மு.க கவுண்டம்பாளையம் வேட்பாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் மீது தகுதியிழப்பு நடவடிக்கை எடுக்க கோரி திமுக வழக்கறிஞர்கள் அணியினர் மாவட்ட ஆட்சிரிடம் இன்று மனு கொடுத்தனர்.



திமுக வேட்பாளர் மீது அவதூறு பரப்புவதாக கூறி அ.இ.அ.தி.மு.க கவுண்டம்பாளையம் வேட்பாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் மீது தகுதியிழப்பு நடவடிக்கை எடுக்க கோரி திமுக வழக்கறிஞர்கள் அணியினர் மாவட்ட ஆட்சிரிடம் இன்று மனு கொடுத்தனர்.



கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன் மீது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பி. ஆர்.ஜி. அருண்குமார் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சமூக வலைதளங்களில் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்.

சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பான பொய்க் குற்றச்சாட்டுகளை வைத்து கவுண்டம்பாளையம் திமுக வேட்பாளர் பையா ஆர். கிருஷ்ணன் மற்றும் திமுகவின் தலைவர் ஸ்டாலினை விமர்சனம் செய்து வருகிறார். இந்தப் பதிவுகள் பையா ஆர்.கிருஷ்ணன் அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்கள் பார்வையில் தரக்குறைவான பிம்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக, குற்றம் சாட்டினர்.

எனவே, அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் பி.ஆர்.ஜி அருண்குமாரின் இத்தகைய செயல்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் வெளியிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...