வால்பாறை: வால்பாறையில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் செந்தில்ராஜன் வாக்கு சேகரித்தார்.
வால்பாறை: வால்பாறையில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் செந்தில்ராஜன் வாக்கு சேகரித்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை, சேத்துமடை, ஆழியார், வால்பாறை, சோலையார் டேம், முடிஷ் போன்ற பகுதிகளில் இரண்டு நாட்களாக மக்கள் நீதி மய்யக் கட்சி வேட்பாளர் செந்தில்ராஜன் வால்பாறையில் உள்ள பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். வால்பாறையில் உள்ள வாட்டர் பால்ஸ், கவர்கள், ஐயற்பாடி ரொட்டிக்கடை, பாரலை போன்ற எஸ்டேட் பகுதிகளில் வாகனங்கள் மூலம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

வால்பாறையில் காந்திசிலை மற்றும் ஸ்டேன் மோர் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் பகுதியில் வாகனங்களில் சென்று பொதுமக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு பெற்றுத் தருவதாகவும், வால்பாறை டவுன் பகுதியில் அதிநவீன கழிப்பிட வசதி மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்து வசதி செய்து தரப்படும் என்றும், தொழிலாளர்களின் குடியிருப்புகளை சொந்தமாக மாற்றித் தருவதாகவும் பொதுமக்களிடம் கூறி தீவிர வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை, சேத்துமடை, ஆழியார், வால்பாறை, சோலையார் டேம், முடிஷ் போன்ற பகுதிகளில் இரண்டு நாட்களாக மக்கள் நீதி மய்யக் கட்சி வேட்பாளர் செந்தில்ராஜன் வால்பாறையில் உள்ள பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். வால்பாறையில் உள்ள வாட்டர் பால்ஸ், கவர்கள், ஐயற்பாடி ரொட்டிக்கடை, பாரலை போன்ற எஸ்டேட் பகுதிகளில் வாகனங்கள் மூலம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
வால்பாறையில் காந்திசிலை மற்றும் ஸ்டேன் மோர் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் பகுதியில் வாகனங்களில் சென்று பொதுமக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு பெற்றுத் தருவதாகவும், வால்பாறை டவுன் பகுதியில் அதிநவீன கழிப்பிட வசதி மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்து வசதி செய்து தரப்படும் என்றும், தொழிலாளர்களின் குடியிருப்புகளை சொந்தமாக மாற்றித் தருவதாகவும் பொதுமக்களிடம் கூறி தீவிர வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.