கோவை: உலக வனநாளை முன்னிட்டு மரம் வளர்ப்பு பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.
கோவை: உலக வனநாளை முன்னிட்டு மரம் வளர்ப்பு பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.
உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வன நாளை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை விரிவாக்க மையம் மற்றும் இயற்கை பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து வேலூர் ஆதிபராசக்தி தோட்டக்கலைத்துறை மாணவிகளுக்கு மரம் வளர்ப்பு பயிற்சி நடத்தப்பட்டது.

மரக்கன்றுகள் நர்சரி அமைத்தல் பற்றி வனவர்கள் சர்மிளா, பிரியதர்ஷினி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாணவிகள் நர்சரியை பார்வையிட்டு விவரங்களைச் சேகரித்தனர்.
தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குதல், விவசாயிகள் மற்றும் வனத்துறையினருக்கு இணைப்பு பாலமாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பங்கு பற்றிய சிறப்பு கருத்தரங்கும் நடைபெற்றது.
வனச்சரகர் சுப்புராஜ், ஓய்வு பெற்ற வனவர் டோம்னிக், இயற்கை பவுண்டேசன் நிறுவனர் ம.வினோத் ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட வனவியல் விரிவாக்க அலுவலர் தினேஷ்குமார் மாணவிகளுக்கு வனவிலங்குகள் மற்றும் காடுகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினார்.

முடிவில்மாணவிகளுக்கு விதைப் பந்துகள், பயிற்சி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கப்பட்டது.

ஓய்வுபெற்ற வனவர் மதிவாணன், சமூகக் காடுகள் துறை இயற்கை பவுண்டேசன் அறங்காவலர் ராமலிங்கம், அரிமா லோகநாதன், அருண்பாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வன நாளை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை விரிவாக்க மையம் மற்றும் இயற்கை பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து வேலூர் ஆதிபராசக்தி தோட்டக்கலைத்துறை மாணவிகளுக்கு மரம் வளர்ப்பு பயிற்சி நடத்தப்பட்டது.
மரக்கன்றுகள் நர்சரி அமைத்தல் பற்றி வனவர்கள் சர்மிளா, பிரியதர்ஷினி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாணவிகள் நர்சரியை பார்வையிட்டு விவரங்களைச் சேகரித்தனர்.
தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குதல், விவசாயிகள் மற்றும் வனத்துறையினருக்கு இணைப்பு பாலமாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பங்கு பற்றிய சிறப்பு கருத்தரங்கும் நடைபெற்றது.
வனச்சரகர் சுப்புராஜ், ஓய்வு பெற்ற வனவர் டோம்னிக், இயற்கை பவுண்டேசன் நிறுவனர் ம.வினோத் ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட வனவியல் விரிவாக்க அலுவலர் தினேஷ்குமார் மாணவிகளுக்கு வனவிலங்குகள் மற்றும் காடுகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினார்.
முடிவில்மாணவிகளுக்கு விதைப் பந்துகள், பயிற்சி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கப்பட்டது.
ஓய்வுபெற்ற வனவர் மதிவாணன், சமூகக் காடுகள் துறை இயற்கை பவுண்டேசன் அறங்காவலர் ராமலிங்கம், அரிமா லோகநாதன், அருண்பாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.