கோவையில் வங்கிப் பணத்துக்கு பாதுகாப்புக்கு வந்த செக்யூரிட்டியிடம் இரவல் துப்பாக்கி: 2 பேர் கைது!

கோவை: கோவையில் வங்கிப் பணத்துக்கு பாதுகாப்புக்கு வந்த செக்யூரிட்டியிடம் இரவல் துப்பாக்கி இருந்தது. இதையடுத்து அவரையும் துப்பாக்கி உரிமையாளரையும் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் வங்கிப் பணத்துக்கு பாதுகாப்புக்கு வந்த செக்யூரிட்டியிடம் இரவல் துப்பாக்கி இருந்தது. இதையடுத்து அவரையும் துப்பாக்கி உரிமையாளரையும் போலீசார் கைது செய்தனர்.

கோவையில் இன்று மதியம் திருச்சிதெற்கு வட்டாட்சியர் தேர்தல் அதிகாரி புனிதவதி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த சாலையில் வந்த வேன் ஒன்றை மறித்து சோதனை செய்தபோது, வங்கி ஒன்றுக்கு ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதுகுறித்து விசாரித்தனர்.

இதைத்தொடர்ந்து பாதுகாப்புக்காக வந்த செக்யூரிட்டி சுப்பிரமணியன் (வயது 55) என்பவர் கொண்டுவந்த துப்பாக்கி குறித்து விசாரித்தனர். அப்போது அவர், அது என்னுடைய துப்பாக்கி அல்ல, நண்பரிடம் இரவலாக வாங்கி வந்தது என்று கூறினார். இது படைக்கல சட்டப்பிரிவின் கீழ் தவறான செயல் என்பதால். துப்பாக்கியை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து சுப்பிரமணியனையும் ஆஜர்படுத்தினர்.

இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்து துப்பாக்கியின் உரிமையாளர் நாகலிங்கத்தை வரவழைத்து விசாரணை செய்தனர். அவர்கள் இருவர் மீதும் படைக்கல தடுப்புப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...