கோவை: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயராம் பீளமேடு சந்தையில் காய்கறி விற்பனை செய்து வாக்கு சேகரித்தார்.
கோவை: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயராம் பீளமேடு சந்தையில் காய்கறி விற்பனை செய்து வாக்கு சேகரித்தார்.
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் இன்று மாலை பீளமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பீளமேடு பகுதியில் உள்ள வாரச் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்தும், அங்குள்ள வியாபாரிகளுடன் கலந்துரையாடியும் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் வாக்காளர்களிடம் பேசுகையில், தான் வெற்றி பெற்றால் வியாபாரிகளின் நலன் காக்க பல புதுமையான திட்டங்களை செயல்படுத்தப்படுத்துவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
அப்போது வியாபாரிகள் தரப்பில் வேட்பாளரிடம் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.