திருப்பூர்: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வாழ்வில் நலம் பெற வேண்டும் என்றால் ஸ்டாலின் தான் முதல்வராக வரவேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.
திருப்பூர்: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வாழ்வில் நலம் பெற வேண்டும் என்றால் ஸ்டாலின் தான் முதல்வராக வரவேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இன்று உடுமலையில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவுக்கு கூட்டணி சார்பில் திமுக மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சியினர் பங்கேற்றனர்.
இந்த அலுவலக திறப்பு விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு பங்கேற்றார்.
திறப்பு விழாவிற்கு பிறகு பேட்டியளித்த தங்கபாலு, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலம் பெற வேண்டும் என்றால் மு க ஸ்டாலின் தான் முதலமைச்சராக வரவேண்டும் தமிழக மக்களின் எதிர்கால நலனை காக்க அவர் முதலமைச்சராக வருவது உறுதி என கூறினார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இன்று உடுமலையில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவுக்கு கூட்டணி சார்பில் திமுக மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சியினர் பங்கேற்றனர்.
இந்த அலுவலக திறப்பு விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு பங்கேற்றார்.
திறப்பு விழாவிற்கு பிறகு பேட்டியளித்த தங்கபாலு, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலம் பெற வேண்டும் என்றால் மு க ஸ்டாலின் தான் முதலமைச்சராக வரவேண்டும் தமிழக மக்களின் எதிர்கால நலனை காக்க அவர் முதலமைச்சராக வருவது உறுதி என கூறினார்.