கோவை: பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் வரதராஜன் சுட்டெரிக்கும் வெயிலில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை: பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் வரதராஜன் சுட்டெரிக்கும் வெயிலில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் வரதராஜன் நகரப்பகுதியில் வார்டு வாரியாக வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இன்று அன்னை கஸ்தூரிபாய் வீதி, நேரு நகர் பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அங்கு வெயிலில் நின்று கொண்டிருந்த சிறுவர்களுக்கு தொப்பிகளை அணிவித்தார். அப்போது, சிறுவர்கள் ஸ்டாலின்தான் வராரு விடியல் தர போராரு பாடலைப் பாடி உற்சாகப்படுத்தினர். மேலும் அங்கிருந்த மூதாட்டியின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்.
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் வரதராஜன் நகரப்பகுதியில் வார்டு வாரியாக வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இன்று அன்னை கஸ்தூரிபாய் வீதி, நேரு நகர் பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அங்கு வெயிலில் நின்று கொண்டிருந்த சிறுவர்களுக்கு தொப்பிகளை அணிவித்தார். அப்போது, சிறுவர்கள் ஸ்டாலின்தான் வராரு விடியல் தர போராரு பாடலைப் பாடி உற்சாகப்படுத்தினர். மேலும் அங்கிருந்த மூதாட்டியின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்.