கோவை: தமிழகத்தில் அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காகவே மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பி.ஆர் நடராஜன் எம்பி தெரிவித்தார்.
கோவை: தமிழகத்தில் அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காகவே மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பி.ஆர் நடராஜன் எம்பி தெரிவித்தார்.
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக்கை ஆதரித்து பி.ஆர். நடராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல் விலையை தினமும் உயர்த்தி வருகிறது. இதேபோல, காஸ் சிலிண்டர் விலை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் அறிவிப்பு காரணமாக கடந்த பத்து நாட்களாக விலை உயர்வை மோடி அரசு அறிவிக்கவில்லை. இல்லையென்றால் பெட்ரோல் விலை 100ஐ கடந்தும், கேஸ் சிலிண்டர் விலை ஆயிரத்தை கடந்தும் சென்றிருக்கும்.
வேலை இல்லை, வருவாய் இல்லை, சம்பள உயர்வு இல்லை என்கிற நிலையில் இந்த விலை உயர்வு என்பது ஏழை, எளிய, நடுத்தர என அனைத்து தரப்பு மக்களையும் பெரும் சித்தரவதைக்கு உள்ளாக்கியுள்ளது. இவர்களுக்கு தைரியம் இருந்தால் இந்த விலைவாசி உயர்வை நியாயப்படுத்தி வாக்குகளை கேட்டுப்பாருங்கள் என்றார்.
கடந்த பத்தாண்டு கால அதிமுக அரசை அப்புறப்படுத்த, பாஜக என்கிற தீய சக்தியை பாடம் புகட்ட இந்த தேர்தலை கவனத்தோடு உழைப்பாளி மக்கள் பயன்படுத்த வேண்டும். சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்கிற கலைஞரின் எண்ணத்திற்கு செயல்வடிவம் தரும் தளபதியின் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என்கிற இந்த இருபெரும் காரணங்களுக்காகவே அதிமுக அரசை அப்புறப்படுத்த வேண்டும். அத்தகைய பணியை உழைப்பாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக்கை ஆதரித்து பி.ஆர். நடராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல் விலையை தினமும் உயர்த்தி வருகிறது. இதேபோல, காஸ் சிலிண்டர் விலை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் அறிவிப்பு காரணமாக கடந்த பத்து நாட்களாக விலை உயர்வை மோடி அரசு அறிவிக்கவில்லை. இல்லையென்றால் பெட்ரோல் விலை 100ஐ கடந்தும், கேஸ் சிலிண்டர் விலை ஆயிரத்தை கடந்தும் சென்றிருக்கும்.
வேலை இல்லை, வருவாய் இல்லை, சம்பள உயர்வு இல்லை என்கிற நிலையில் இந்த விலை உயர்வு என்பது ஏழை, எளிய, நடுத்தர என அனைத்து தரப்பு மக்களையும் பெரும் சித்தரவதைக்கு உள்ளாக்கியுள்ளது. இவர்களுக்கு தைரியம் இருந்தால் இந்த விலைவாசி உயர்வை நியாயப்படுத்தி வாக்குகளை கேட்டுப்பாருங்கள் என்றார்.
கடந்த பத்தாண்டு கால அதிமுக அரசை அப்புறப்படுத்த, பாஜக என்கிற தீய சக்தியை பாடம் புகட்ட இந்த தேர்தலை கவனத்தோடு உழைப்பாளி மக்கள் பயன்படுத்த வேண்டும். சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்கிற கலைஞரின் எண்ணத்திற்கு செயல்வடிவம் தரும் தளபதியின் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என்கிற இந்த இருபெரும் காரணங்களுக்காகவே அதிமுக அரசை அப்புறப்படுத்த வேண்டும். அத்தகைய பணியை உழைப்பாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.