திமுக ஆட்சியில் தமிழக உரிமை பிரச்சனைக்கு தீர்வு காணாமல் மக்களுக்கு துரோகம் மட்டுமே செய்தனர் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

கோவை: திமுக ஆட்சியின் போது தமிழக உரிமை பிரச்சனைக்கு தீர்வு காணாமல் மக்களுக்கு துரோகம் மட்டுமே செய்தனர் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: திமுக ஆட்சியின் போது தமிழக உரிமை பிரச்சனைக்கு தீர்வு காணாமல் மக்களுக்கு துரோகம் மட்டுமே செய்தனர் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமியின் அறிமுக கூட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நா.மூ சுங்கம் பகுதியில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வால்பாறை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி அறிமுகம் செய்து பேசுகையில்,

கடந்த திமுக ஆட்சியின் போது காவிரி நீர், முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்சனை, கச்சத்தீவு போன்ற தமிழக உரிமை பிரச்சனைகளை மீட்கக் கூடிய வாய்ப்பு இருந்தபோது, மத்திய அமைச்சர் பதவிக்காக எதுவும் செய்யாமல் தமிழக மக்களுக்கு துரோகம் மட்டுமே செய்தனர் என்றும், ராணுவ தளவாடங்களை அனுப்பி இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்தது, சிங்கள வெறியர்களால் 50ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் கற்பழிப்புக்கு துணை போனது திமுகவும்,காங்கிரஸ் தான் என்று குற்றம் சாட்டினார்.

அதேபோல, திமுக ஆட்சியின் போது தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டு தற்போது ஆட்சிக்கு வர நினைப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

என் மீதும் சக அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சொல்லும் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக கூட்டணியில் உள்ள வைகோ ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் பெறப்பட்ட பணம் திமுகவில் தான் இருப்பதாக பேசியதற்கு இதுவரை பதில் கூறாமல் இருப்பதாகவும், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் சொன்னால் சொல்லிக் கொண்டு போங்கள், ஆனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதலமைச்சராக அமர வைக்க நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார்.

இந்த அறிமுக கூட்டத்தில் பாஜக, பாமக, தாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...