தமிழக கோயில்களுக்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு என்பது மக்களை ஏமாற்றும் செயல்: தி.மு.க. மீது இந்து முன்னணி பாய்ச்சல்!

கோவை: தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தமிழகக் கோயில்களுக்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று மீது இந்து முன்னணி கூறியுள்ளது.


கோவை: தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தமிழகக் கோயில்களுக்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று மீது இந்து முன்னணி கூறியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்து முன்னணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்துகொண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து பேசினார். இதைத்தொடர்ந்து காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோயில்களை ஆன்மிகவாதிகள் மற்றும் மடாதிபதிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறிய கருத்துக்கு தி.மு.க.ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொள்கை இல்லாமல் சிலர் அரசியல் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தி.மு.க.வினர் கடவுள் இல்லை என்று கூறி விட்டு கொள்கை மறந்துள்ளனர்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில், கோயில் புனரமைப்புக்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் கோயிலுக்கு 5000 கோடி நிதி வரும் நிலையில் ஆயிரம் கோடி நிதி ஓதுக்கீடு என்பது மக்களை ஏமாற்றும் செயல். கோயில்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். கோயில் நிலங்கள் அரசியல்வாதிகள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி இந்து விரோத கூட்டணியாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் தி.மு.க. கூட்டணியில் உள்ள திருமாவளவன் தொடர்ந்து இந்துக்கள் பற்றியும் அவதூறு பரப்பி வருகிறார்.

ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோர் இரட்டை வேடம் போடுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். தி.மு.க. .கூட்டணியில் உள்ள அதியமான் சாதிக் கலவரத்தை தூண்டும்வகையில் செயல்பட்டு வருகிறார். தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை சாத்தியமில்லை. இலவசக் கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்பது இந்து முன்னணி கருத்தாகும், தமிழக முதல்வர் மீது குற்றம் சொல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால் தி.மு.க.மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் என்று அரசியல் கட்சியினர் கூறுவது வெற்று வாக்குறுதி. எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் இந்து விரோத கூட்டணியான தி.மு.க.வுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...