கோவை: மக்கள் நீதி மையம் சார்பில் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் மற்றும் கட்சியின் துணை தலைவர் டாக்டர். ஆர். மகேந்திரனை ஆதரித்து, கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்கூட்டம் இன்று மாலை பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் நடந்தது.
கோவை: மக்கள் நீதி மையம் சார்பில் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் மற்றும் கட்சியின் துணை தலைவர் டாக்டர். ஆர். மகேந்திரனை ஆதரித்து, கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்கூட்டம் இன்று மாலை பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் நடந்தது.
அப்போது பேசிய, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர், டாக்டர் ஆர் மகேந்திரன்: சிங்காநல்லூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 19 வார்டுகளில் 17 வார்டுகளில் எனது பிரசாரத்தை நிறைவு செய்துள்ளேன்.இரண்டு வார்டுகள் மட்டுமே மீதம் உள்ளன. செல்லும் இடம் எல்லாம் மிகுந்த வரவேற்பை மக்கள் கொடுக்கின்றனர்.

ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு வழங்குவதை எங்கள் கட்சி நோக்கமாக கொண்டு தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளோம். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். அவரால் செய்யும் பொழுது, மற்றவர்களால் ஏன் செய்ய முடியாது. இதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது என்பது சாத்தியமான ஒரு திட்டம் தான். இதுபோன்ற மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை எங்கள் கட்சி கொண்டு உள்ளது.
இதை கருத்தில் கொண்டு மக்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். இவர் அவர் பேசினார்.