பொள்ளாச்சி: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், பொள்ளாச்சி தனக்கு புதிய ஊர் இல்லை, பல வெற்றிகளை தந்த ஊர் என்று தெரிவித்தார். தனக்கு சாதி, மதம் கிடையாது என்றும் இப்படிப்பட்ட தலைமைதான் மக்களுக்கு அவசியம் என்றும், 234 தொகுதிகளும் தனது சொந்த தொகுதியாக நம்புவதாக தெரிவித்தார்.
மேலும், ஓட்டுக்கு ரூ.5000 வாங்கிக்கொண்டு மக்கள் வாக்களித்தால் 5 வருடம் மக்களின் வாழ்க்கையை குத்தகைக்கு எடுத்துக் கொள்வார்கள், என தெரிவித்த கமல் ஹாசன், முதல்வரே சில்லறை காசுகளை கையில் வைத்து அமுத்தும் சில வீடியோக்களை நான் பார்த்தேன், அந்த அரசியலை மாற்ற வேண்டும் என்பதர்க்காக தான் நாங்கள் வந்துள்ளோம், என்றார்.

மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் தங்கள் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள், என்று உறுதியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், பொள்ளாச்சி தனக்கு புதிய ஊர் இல்லை, பல வெற்றிகளை தந்த ஊர் என்று தெரிவித்தார். தனக்கு சாதி, மதம் கிடையாது என்றும் இப்படிப்பட்ட தலைமைதான் மக்களுக்கு அவசியம் என்றும், 234 தொகுதிகளும் தனது சொந்த தொகுதியாக நம்புவதாக தெரிவித்தார்.
மேலும், ஓட்டுக்கு ரூ.5000 வாங்கிக்கொண்டு மக்கள் வாக்களித்தால் 5 வருடம் மக்களின் வாழ்க்கையை குத்தகைக்கு எடுத்துக் கொள்வார்கள், என தெரிவித்த கமல் ஹாசன், முதல்வரே சில்லறை காசுகளை கையில் வைத்து அமுத்தும் சில வீடியோக்களை நான் பார்த்தேன், அந்த அரசியலை மாற்ற வேண்டும் என்பதர்க்காக தான் நாங்கள் வந்துள்ளோம், என்றார்.
மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் தங்கள் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள், என்று உறுதியளித்தார்.