கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர், சிவாவை ஆதரித்து கட்சித் தலைவர் கமலஹாசன் இன்று கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு பரப்புரையில் ஈடுபட்டார்.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர், சிவாவை ஆதரித்து கட்சித் தலைவர் கமலஹாசன் இன்று கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய, கமலஹாசன்.. கிணத்துக்கடவு தொகுதியில் நன்கு அறிமுகமான சிவா பல நாட்களாக மக்களுக்கு நல்லது செய்து வருகிறார், மேலும் மக்களுக்கு நல்லது செய்ய இன்னுமொரு அதிகாரம் வேண்டும், என்பதற்காகவே மக்கள் நீதி மய்யம் சார்பாக சிவாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
தமிழகத்தில் 50 வருடங்களாக செய்த தப்பை திருத்தவே மக்கள் நீதி மய்யம் இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் களம் காண்கிறது. சில கட்சிகள் மக்களுக்கான நல்ல திட்டங்களை செய்ய முடியாததை மறைக்கவே இலவசத் திட்டங்களை அறிவித்து வருகின்றனர், என்று விமர்சித்தார்.

மக்கள் நீதி மய்யம் 6 மாதத்தில் அழிந்துவிடும் என்றும் சொன்னவர் மத்தியில் தற்போது மூன்று வருடங்களாக பயணித்து வருவதைக் கண்டு சிலருக்கு கை, கால்கள் நடுங்கி வருவதாகவும், தமிழகத்தில் 3வது அணியும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையில் மக்கள் நீதி மையம் போட்டியிடுகிறது என்றார் கமல்.

கமலஹாசன் ஒரு கருவி அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்தை சீரமைக்க நான் மட்டும் போதாது, மக்களும் கைகோர்க்க வேண்டும் என்றும் பரப்புரையின் போது கமலஹாசன் பேசினார்.
அப்போது பேசிய, கமலஹாசன்.. கிணத்துக்கடவு தொகுதியில் நன்கு அறிமுகமான சிவா பல நாட்களாக மக்களுக்கு நல்லது செய்து வருகிறார், மேலும் மக்களுக்கு நல்லது செய்ய இன்னுமொரு அதிகாரம் வேண்டும், என்பதற்காகவே மக்கள் நீதி மய்யம் சார்பாக சிவாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
தமிழகத்தில் 50 வருடங்களாக செய்த தப்பை திருத்தவே மக்கள் நீதி மய்யம் இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் களம் காண்கிறது. சில கட்சிகள் மக்களுக்கான நல்ல திட்டங்களை செய்ய முடியாததை மறைக்கவே இலவசத் திட்டங்களை அறிவித்து வருகின்றனர், என்று விமர்சித்தார்.
மக்கள் நீதி மய்யம் 6 மாதத்தில் அழிந்துவிடும் என்றும் சொன்னவர் மத்தியில் தற்போது மூன்று வருடங்களாக பயணித்து வருவதைக் கண்டு சிலருக்கு கை, கால்கள் நடுங்கி வருவதாகவும், தமிழகத்தில் 3வது அணியும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையில் மக்கள் நீதி மையம் போட்டியிடுகிறது என்றார் கமல்.
கமலஹாசன் ஒரு கருவி அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்தை சீரமைக்க நான் மட்டும் போதாது, மக்களும் கைகோர்க்க வேண்டும் என்றும் பரப்புரையின் போது கமலஹாசன் பேசினார்.