கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட டவுன்ஹால் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட டவுன்ஹால் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் டவுன்ஹால் பெரிய கடை வீதி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆணையர் அவர்கள், முகக்கவசம் அணியாமல் இருந்த தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோருக்கு தலா ரூ.200/- அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

பேருந்து நிறுத்த பகுதியில் இருந்த பொதுமக்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கிய பின்னர், அப்பகுதியில் இருந்த சாலையோரக் கடைகளின் முன்பு குப்பைகள் இருந்ததை பார்வையிட்டார்.

மேலும், கடை உரிமையாளரிடம் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் எனவும் சாலையோரங்களில் போடக் கூடாது என அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது நகர் நல அலுவலர் மரு.ராஜா, மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் டவுன்ஹால் பெரிய கடை வீதி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆணையர் அவர்கள், முகக்கவசம் அணியாமல் இருந்த தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோருக்கு தலா ரூ.200/- அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
பேருந்து நிறுத்த பகுதியில் இருந்த பொதுமக்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கிய பின்னர், அப்பகுதியில் இருந்த சாலையோரக் கடைகளின் முன்பு குப்பைகள் இருந்ததை பார்வையிட்டார்.
மேலும், கடை உரிமையாளரிடம் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் எனவும் சாலையோரங்களில் போடக் கூடாது என அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது நகர் நல அலுவலர் மரு.ராஜா, மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.