கிணத்துக்கடவு தொகுதியில், திமுக மற்றும் அதிமுகவினர் பிரச்சாரத்தின் போது மோதல்..!

கோவை: கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் இன்று கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி, 100 வது வார்டு மேட்டூர் பகுதியில், மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி உள்ளிட்ட திமுகவினர் பிரச்சாரம் வேலைகளை ஏற்பாடு செய்திருந்தனர்.


கோவை: கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் இன்று கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி, 100 வது வார்டு மேட்டூர் பகுதியில், மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி உள்ளிட்ட திமுகவினர் பிரச்சாரம் வேலைகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்காக, அப்பகுதியில் "ஸ்டாலின் தான் வராறு, விடியலை தரப்போறாறு" என்ற பாடலுடன் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க தயாராகினர். இந்த நிலையில், அப்பகுதி அதிமுக வார்டு செயலாளர் வேணுகோபால் அதிமுகவினருடன் வந்து அதிமுக கொடியை பிடித்துக்கொண்டு தேவையில்லாத பிரச்சினையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.



மேலும், திமுக அலுவலகம் முன்பு அமர்ந்து வன்முறையை தூண்டும் விதத்தில் அராஜகத்தில் ஈடுபட்டதாக, அதிமுகவினர் மீது திமுக குற்றம் சாட்டியுள்ளனர்.



இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் அதிமுகவினரை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனாலும், அதிமுகவினர், காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, அங்கு திமுகவினர் அதிகளவில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.



தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுகவினர் இடையே சில இடங்களில் இதுபோன்ற சலசலப்புகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...